8 10 scaled
உலகம்செய்திகள்

உலகின் மிகவும் தேடப்படும் பெண்… ரூ 42 கோடி பரிசு அறிவிப்பு

Share

உலகின் மிகவும் தேடப்படும் பெண்… ரூ 42 கோடி பரிசு அறிவிப்பு

உலகின் மிகவும் தேடப்படும் பெண் என கருதப்படும் மாயமான கிரிப்டோ ராணியை கைது செய்ய உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ 42 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மானிய குடியுரிமை கொண்ட பல்கேரியாவில் பிறந்த Ruja Ignatova என்பவரே உலகின் மிகவும் தேடப்படும் பெண் என அறியப்படுகிறார். இவர் இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி மோசடிகளில் ஒன்றின் முதன்மை குற்றவாளி என்றே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

2014ல் OneCoin என்ற போலியான கிரிப்டோ ஒன்றை அறிமுகம் செய்து, அதனூடாக முதலீட்டாளர்களின் 4 பில்லியன் டொலர் தொகையை மோசடி செய்துள்ளார். தற்போது 43 வயதாகும் ருஜா, கடந்த 2017 முதல் எந்த அடையாளமும் இன்றி மாயமாகியுள்ளார்.

2022ல் இருந்து மிகவும் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார். இவர் தொடர்பில், உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு 100,000 டொலர் சன்மானம் அளிக்கப்படும் என முன்னர் FBI அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆனால் அதன் பின்னர் படிப்படியாக 5 மில்லியன் டொலர் (சுமார் ரூ 42 கோடி) என அறிவித்துள்ளனர். ருஜா பொதுவாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சூழ பயணப்படுகிறார் என்றே நம்பப்படுகிறது.

தமது முக அமைப்பை அவர் மாற்றியிருக்கலாம் என்றும் இதனால் அவர் அடையாளம் காணப்படாமல் போகலாம் என்றும் FBI அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், அவர் ஜேர்மன் குடியுரிமை கொண்டவர் என்பதால்,

அந்த நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அமீரகம், ரஷ்யா, கிரேக்கம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் பயணப்பட வாய்ப்பிருப்பதாகவும் FBI அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பல்கேரிய மாஃபியாக்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் FBI அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கடைசியாக அவர் அக்டோபர் மாதம் 2017ல் சோபியாவிலிருந்து ஏதென்ஸுக்கு ரியானேர் விமானத்தில் பயணப்பட்டுள்ளார்.

2018ல் சொகுசு படகு ஒன்றில் வைத்து ருஜா கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியானது. மேலும் ருஜாவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அயோனியன் கடலில் வீசப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால், ருஜா தற்போதும் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கையில் FBI அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...