7 11 scaled
உலகம்செய்திகள்

ஈரானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்., மொத்தம் நான்கே வேட்பாளர்கள்

Share

ஈரானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்., மொத்தம் நான்கே வேட்பாளர்கள்

ஈரானில் ஜனாதிபதி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 58,000க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

கடந்த மாதம் விமான விபத்தில் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இறந்ததை அடுத்து புதிய ஜனாதிபதியை இத்தேர்தல் தீர்மானிக்கும்.

இத்தேர்தலில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் ஆனால் வாக்களிக்க சில மணித்தியாலங்களுக்கு முன்னர் 2 வேட்பாளர்கள் தங்கள் பெயர்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

துணை ஜனாதிபதி அமீர் ஹுசைன் காசிசாதே ஹஷ்மி (Amir-Hossein Ghazizadeh Hashemi) புதன்கிழமை இரவு தனது பெயரை வாபஸ் பெற்றார். புரட்சிப் படையின் ஒற்றுமையை நிலைநாட்டவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன் என்று அவர் கூறினார்.

துணை ஜனாதிபதிக்குப் பிறகு, தெஹ்ரான் மேயர் அலிரெசா ஜகானியும் (Alireza Zakani) பின்வாங்க முடிவு செய்தார். இதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு 80 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும், கார்டியன் கவுன்சில் தேர்தலில் போட்டியிட 6 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் தேர்தலில் போட்டியிட கார்டியன் கவுன்சில் ஒப்புதல் அளிக்கவில்லை.

மூன்று முறை பாராளுமன்ற சபாநாயகராக இருந்த அலி லரிஜானியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்த போதிலும் அவரும் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. 7 பெண்களும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தும் ஒப்புதல் பெறவில்லை.

சயீத் ஜலிலி (Saeed Jalili)
சயீத் ஜலிலி தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் செயலாளராக இருந்தவர். மேற்கத்திய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணு ஆயுதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பேராளர். அணு ஆயுதங்கள் தொடர்பாக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார். அவர் அடிப்படைவாத முகாமைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார் மற்றும் அயதுல்லா கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர்.

முகமது பாக்கர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf)
முகமது பாக்கர் கலிபாஃப் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகராக உள்ளார். அவர் தெஹ்ரானின் மேயராகவும், சக்திவாய்ந்த புரட்சிகர காவலர்களின் தலைவராகவும் இருந்துள்ளார். ஈரான் காவல்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முஸ்தபா பூர்மொஹம்மதி
முஸ்தபா பூர்மொஹம்மதி (Mostafa Pourmohammadi) முன்னாள் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார். அவர் ஒரு தீவிரமான தலைவர் என்றும் அறியப்படுகிறார், ஆனால் அவர் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரானவர். ஈரானிய பெண்களை இவ்வளவு கொடூரமாக நடத்தக் கூடாது என்று கூறும் ஒருவர். தான் ஜனாதிபதியானால் ஹிஜாப் சட்டத்தை ரத்து செய்வேன் என உறுதியளித்துள்ளார்.

மசூத் பெசேஷ்கியான்
Tabriz எம்பி மசூத் பெசேஷ்கியான் (Masoud Pezeshkian) மிகவும் தாராளவாத தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அதிபர் ஹசன் ரூஹானிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். விவாதங்களில் ஹிஜாபை பலமுறை எதிர்த்துள்ளார். தார்மீக காவல்துறைக்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறுகிறார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...