24 667b6a3d41a43 33
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யும் முட்டை வியாபாரி: மக்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

Share

இலங்கையில் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யும் முட்டை வியாபாரி: மக்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

இலங்கையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை மூலம் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யுமளவுக்கு பணக்காரராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு முட்டை உற்பத்தி செலவு 31 ரூபாய் என்றாலும், 50-55 ரூபாய்க்கு இடையேயான விலையில் நுகர்வோரை சென்றடைகிறது.

அதற்கமைய, முட்டை வியாபாரிகள் வரம்பற்ற இலாபம் ஈட்டுகின்றனர். மேலும், முட்டை வியாபாரிகள் பெரும்பாலானோர் உற்பத்தி செய்த முட்டைகளை தனியார் இடங்களில் இருப்பு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சந்தையில் போலியான முட்டை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு முட்டை விலையை உயர்த்துவதாகவும் அரச கால்நடை துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்தநிலையில், நுகர்வோரை சுரண்டி அதிக இலாபம் ஈட்டும் முட்டை வியாபாரிகள், தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக உலங்குவானூர்தியை கொள்வனவு செய்வது தொடர்பில், விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...