tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

மிக மோசமான போக்குவரத்து நெரிசல் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நகரம்

Share

மிக மோசமான போக்குவரத்து நெரிசல் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நகரம்

அமெரிக்காவின் நியூயார்க்(New York) நகரமே உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக அறியப்படுவதுடன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்த நகரம் அதிகரித்த போக்குவரத்து நெரிசல் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக அறியப்படும் நியூயார்க் நகரத்தில், போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நேரத்தில் பல பில்லியன் டோலர் தொகையை மக்கள் இழப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி,
சராசரியாக ஒரு சாரதி கடந்த ஆண்டில் நியூயார்க் நகர போக்குவரத்து நெரிசலில் சிக்கி 101 மணி நேரம் தாமதித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டு காத்திருப்பதால், பொருளாதாரத்தில் 9.1 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் பட்டியலில் 2 ஆவது இடத்தில் மெக்சிகோ(Mexico) , 3 ஆவது இடத்தில் லண்டன்(London), 4 ஆவது இடத்தில் பாரிஸ்(Paris) மற்றும் 5 ஆவது இடத்தில் சிகாகோ இடம்பிடித்துள்ளன.

இதேவேளை, போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்குவதால் 2023ஆம் ஆண்டில் 70.4 பில்லியன் டொலர் தொகையை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், சராசரியாக 42 மணி நேரம் சாரதிகள் போக்குவரத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...