24 667b6a3d41a43 24
இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்த வடக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர்

Share

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்த வடக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர்

யாழ். (Jaffna) சங்கானையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்ததுடன் அச்சுறுத்தல் விடுக்கும் வைகையில் ஆளுநரின் ஊடகச் செயலாளர் செயற்பட்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்று (25.06.2024) இடம்பெற்ற அம்மாச்சி உணவக திறப்பு விழாவிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.

இதன்போது, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில், ஆளுநரின் ஊடகச் செயலாளர் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஊடகவியலாளர்கள் அந்த இடத்தில் ஆளுநரின் ஊடகச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, உடனே அவர், ‘நீங்கள் யார்? ஊடகவியலாளர்களா? ஊடக அடையாள அட்டை இருக்கிறதா? எந்த ஊடகம்?’ எனக் கேட்டு அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.

இதன்போது, ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்த முயன்ற போது அங்கு வந்த ஆளுநரின் ஊடக பிரிவில் கடமை புரியும் ஒருவர் குறித்து ஊடகச் செயலாளருக்கு, அவர்கள் ஊடகவியலாளர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தியதுடன் சமரசப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர், குறித்த ஊடகச் செயலாளர் தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...