fdd
உலகம்செய்திகள்

ஒரே குத்தில் இந்திய வம்சாவளியினரைக் கொன்ற நபர்: அதிரவைத்த சம்பவம்

Share

ஒரே குத்தில் இந்திய வம்சாவளியினரைக் கொன்ற நபர்: அதிரவைத்த சம்பவம்

அமெரிக்காவில், தங்கும் வசதிகொண்ட உணவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியினர் ஒருவரை, ஒரே குத்தில் கொன்றுள்ளார் ஒருவர்.

அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் அமைந்துள்ள உனவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்தவர் ஹேமந்த் மிஸ்த்ரி (59). ஹேமந்த், இந்தியாவிலுள்ள குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.

கடந்த வார இறுதியில், உணவக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவரை வெளியே போகச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, எதிர்பாராத நேரத்தில் அந்த நபர் ஹேமந்த் முகத்தில் ஓங்கிக் குத்த, அப்படியே சரிந்து கீழே விழுந்துவிட்டார் ஹேமந்த். விழுந்தவர் எழவேயில்லை!

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையிலும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் உயிரிழந்துவிட்டார் ஹேமந்த்.

ஹேமந்த் தாக்கப்படும் காட்சிகளை ஒருவர் வீடியோ எடுத்துள்ள நிலையில், தாக்குதல்தாரியைபொலிசார் விரைவாக கைது செய்துவிட்டார்கள்.

அவர் பெயர் ரிச்சர்ட் (41) என தெரியவந்துள்ளது. ரிச்சர்ட் மீது தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹேமந்த் உயிரிழந்துவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டு கொலைக்குற்றச்சாட்டாக மாற்றப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...