tamilni Recovered 7 scaled
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் புறாக்களை கொல்ல வாக்கெடுப்பு: வெளியான பின்னணி

Share

ஜெர்மனியில் புறாக்களை கொல்ல வாக்கெடுப்பு: வெளியான பின்னணி

ஜெர்மனியில் (Germany) உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைத்து புறாக்களையும் கொல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நகரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி நகரவாசிகளின் ஒப்புதலை பெற்ற பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

‘லிம்பர்க் ‘ (Limburg)என்று அழைக்கப்படும் இந்த சிறிய நகரத்தில் பல்லாயிரக்கணக்கான புறாக்கள் வாழ்கின்றன, அவை நகரவாசிகளுக்கு தலைவலியாக மாறியுள்ளன.

அத்துடன், புறாக்களால் பல ஆண்டுகளாக மாசுபட்டுள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களை சுத்தம் செய்வது நகராட்சி அதிகாரிகளுக்கே தலைவலியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெர்மனியில் புறாக்களை கொல்ல வாக்கெடுப்பு: வெளியான பின்னணி | Referendum In Germany To Kill Pigeons

இந்த நிலையில், புறாக்களை கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளிடம், நகர மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 20ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புறாக்களை கொல்வதற்கு நகரவாசிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி புறாக்களை கொல்ல நகர அதிகாரிகள் தயாராகி வரும் நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும், கருத்துக் கணிப்புகளின்படி, இந்த நடவடிக்கை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...