24 6676e1cc8b1f4
இலங்கைசெய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் கைவரிசை காட்டிய நபர்

Share

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் கைவரிசை காட்டிய நபர்

யாழ்ப்பாணம்(Jaffna) போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் திருடிய நபரொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

இந்த திருட்டுச் சம்பவமானது நேற்றைய தினம்(21.06.2024) மதியம் பார்வையாளர் நேரத்தில் நூதனமான முறையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர், நோயாளி ஒருவரிடம் நூதனமான முறையில் குறிப்பிட்ட நோயாளியை எக்ஸ் கதிர் படம்(X Ray) எடுக்க போக வேண்டும் எனவும் நீங்கள் உணவருந்தி குளித்து விட்டு ஆயத்தமாக இருங்கள் என்றும் கூறி அவரை எக்ஸ் கதிர்ப்படம்(X Ray) எடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்று நோயாளி அணிந்திருந்த மோதிரம், சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இதேவேளை, இந்த திருட்டு சம்பவமானது வைத்தியசாலை சிசிரிவி(CCTV) இல் பதிவாகியுள்ளதுடன் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது வைத்தியசாலை பணிப்பாளர் காரியாலயத்திற்கோ தெரியப்படுத்துமாறு வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...