24 66739dc4ca9b2
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல் : வெளியேறிச் செல்லும் அரசியல்வாதிகள்

Share

மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல் : வெளியேறிச் செல்லும் அரசியல்வாதிகள்

எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முதலில் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுடன் மாத்திரம் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவும், மாற்றுக் குழுக்களும் இணைந்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவுடன் எந்தவிதமான கூட்டணியையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்கள் ஜனாதிபதி முன்னிலையில் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதியுடன் பயணம் ஒன்று இல்லை எனவும், பொதுஜன பெரமுன கொள்கைகளுக்கு எதிரான குழு ஒன்றே அவருடன் இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.​​

நாமலின் ஆட்சேபனை ஒருபுறம் வைத்துவிட்டு அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு உதவும் போது இவ்வாறு கருத்து வெளியிட்டால் மன முறிவுகள் மாத்திரமே ஏற்படும் என பசிலுடன் விவாதத்திற்கு வந்த வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்களை ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டும் என மாற்றுக் குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...

17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...