29 3
இலங்கைசெய்திகள்

தேங்காய் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த தீர்மானம்

Share

தேங்காய் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த தீர்மானம்

நாட்டின் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா (Roshan Perera) குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மே மாதம் வரை 42,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இந்த இறக்குமதி கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நுகர்வுக்கு போதுமான தேங்காய் எண்ணெய் உள்ளதால், தேங்காய் எண்ணையின் விலையை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க முடியாது என பேராசிரியர் கூறியுள்ளார்.

இதேவேளை, சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...