4 7
இலங்கைசெய்திகள்

யாழ்.காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிக்கு நேர்ந்த கதி

Share

யாழ்ப்பாணம் காவல்நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 3.800 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் யாழ் மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை விதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 12 ஆம் திகதி குறித்த கைதி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது காவல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இதன் காரணமாக இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...