27 1
இலங்கைசெய்திகள்

மியன்மார் முகாம்களில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு

Share

மியன்மார் முகாம்களில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு

மியன்மாரில் 9Myanஉள்ள சைபர் கிரைம் என்ற இணையக்குற்ற முகாம்களில் தற்போது பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இலங்கையர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ( Tharaka Balasuriya ) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த முக்கியமான விடயம் தொடர்பில் மியன்மாரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாடு திரும்பிய அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சைபர் முகாம்களில் தற்போது 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுமார் 53,000 சீன பிரஜைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100,000 இளைஞர்கள் இதேபோன்ற நிலைமைகளில் பலவந்தமாக அந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...