36
உலகம்செய்திகள்

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு

Share

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சமீபத்தில் Angus Reid என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கனடா மக்களிடையே ஆதரவு குறைந்துவருவதைக் காட்டியுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 28 சதவிகித மக்கள் மட்டுமே ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 66 சதவிகிதம் மக்கள் ஒரு பிரதமராக, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தங்கள் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கணிப்புகளிலோ, ஆளும் லேபர் கட்சியைவிட எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மக்கள் என்னை விரும்பவில்லை என்றாலும், கனடாவும், கனேடியர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் நன்றாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய என்ன செய்வது என்பதை யோசித்து, அதற்காக முயற்சி செய்துகொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார் ட்ரூடோ.

சமீப காலமாக, இளைஞர்களின் வாக்குகளைக் கவர என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அதையெல்லாம் செய்துவருகிறார் ட்ரூடோ. Podcastகளில் பங்கேற்பது, பேட்டிகள் கொடுப்பது, யூடியூப் சேனல்களில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுவது, ஏன் பெண்கள் கூடைப்பந்து விளையாட்டு குறித்த நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டு பேசிவருகிறார் ட்ரூடோ.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...