4 2
உலகம்செய்திகள்

கனேடிய மக்களுக்கு அவசர பயண எச்சரிக்கை

Share

கனேடிய மக்களுக்கு அவசர பயண எச்சரிக்கை

கனேடிய(Canada)அரசாங்கம் இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் சிலவற்றில் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பாவின் சில நகரங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இது குறித்து அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் தாக்குதல் இடம் பெற்று பலர் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானோர் காயமடைந்திருந்தனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கோடை காலத்தில் பிரான்சின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

எனவே குறித்த பகுதியில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் காணப்படுவதாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிரான்ஸ், இத்தாலி, பஹாமாஸ் போன்ற நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் உள்நாட்டு செய்தி ஊடகங்களின் தகவல்களின் அடிப்படையில் செயற்படுமாறும் கனேடிய அரசாங்கம் தமது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...