24 6665ebef8a35a
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் புதிய பெட்ரோல் வகை

Share

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் புதிய பெட்ரோல் வகை

சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (Lanka IOC)எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இலங்கைக்கு புதிய வகை எரிபொருளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறித்த எரிபொருள் வகை எக்ஸ்பி 100 ஆக்டேன் பெட்ரோல் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாரஹேன்பிட்டி மற்றும் தும்முல்லை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து புதிய பெட்ரோலின் அறிமுகத்தை ஆரம்பிக்க நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்படுகின்றது.

அத்துடன், யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா நிறுவனம் (United Petroleum Australia) ஜூலை இறுதி அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இந்த அவுஸ்திரேலிய நிறுவனமும் தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இக்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...