24 66655557880f0
உலகம்செய்திகள்

தனியொருவராக இதுவரை 110 லிற்றருக்கு மேல் இரத்த தானம் செய்த நபர்

Share

தனியொருவராக இதுவரை 110 லிற்றருக்கு மேல் இரத்த தானம் செய்த நபர்

அமெரிக்காவின் லாங் ஐலேண்டைச் சேர்ந்த ஒருவர் இதுவரை சுமார் 29 கேலன் இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 68 வயதாகும் Henry Bickoff என்பவரே, கடந்த 49 ஆண்டுகளில் சுமார் 29 கேலன் இரத்தம்( தோராயமாக 110 லிற்றர்) தானம் செய்துள்ளார். கடந்த 1975 முதல் இரத்த தானம் செய்து வரும் இவரால், 693 பேர்கள் பயனடைந்துள்ளனர்.

இரத்த தானம் என்பது தாம் உறுதியளித்த ஒன்று எனவும், அதற்கு கொஞ்சம் அங்கீகாரம் கிடைத்திருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் Henry Bickoff குறிப்பிட்டுள்ளார்.

தமது கல்லூரி காலகட்டத்தில் முதல் முறையாக இரத்த தானம் செய்ததாக குறிப்பிடும் அவர், பெரும்பாலானோர் இரத்த தாம் செய்கின்றனர். இது ஒருவகை உலகை காக்க, ஏதேனும் நல்லது அனைவருக்கும் செய்ய வேண்டும் என்ற நிலை என அவர் விளக்கமளித்துள்ளார்.

முதல் தடவை இரத்த தானம் செய்த போது மிகவும் மயக்கமாக உணர்ந்ததாக கூறும் அவர், ஆனால் அது ஒன்றும் தம்மை பயமுருத்தவில்லை என்கிறார். தொடக்கத்தில் ஒவ்வொரு 56 நாட்களுக்கும் ஒருமுறை இரத்த தானம் செய்து வந்ததாக கூறும் அவர், தற்போது வயதின் காரணமாக குறைத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Henry Bickoff-ன் மனைவி அவ்வப்போது இரத்த தானம் செய்து வந்துள்ளார். ஆனால் அரிய வகை இரத்த நோய் காரணமாக அவரது மகள் இரத்த தானம் செய்வதில்லை. மகனுக்கு இதில் ஆர்வம் இல்லை என்றும் Henry Bickoff தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...