24 66640c32ad003
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் மலரும் புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு சாதகமாக இருக்குமா?

Share

பிரித்தானியாவில் மலரும் புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு சாதகமாக இருக்குமா?

பிரித்தானியாவில் அடுத்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆட்சி செய்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தது அனைவரும் அறிந்ததே.

வரும் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்புகள் கூறிவரும் நிலையில், அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சியாவது புலம்பெயர்ந்தோருக்கு சாதகமாக இருக்குமா என்னும் கேள்வி பலர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரித்தானியாவில் மலரும் புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு சாதகமாக இருக்குமா என்றால், அது சந்தேகமே என தோன்றுகிறது, லேபர் கட்சியின் சில நடவடிக்கைகளால்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் கைவிடப்படும் என்று லேபர் கட்சியின் தலைவரான Keir Starmer கூறியுள்ளது உண்மைதான். ஆனாலும், லேபர் கட்சியும், தங்கள் கட்சி புலம்பெயர்தலை எப்படி கட்டுப்படுத்தப்போகிறது என்பது குறித்த திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் பணியாளர் தட்டுப்பாடு உள்ள துறைகளில், பிரித்தானியர்களுக்கு பயிற்சியளித்து அந்த துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பதே லேபர் கட்சியின் திட்டம். அப்படி இந்த திட்டத்தை ஏற்க மறுக்கும் நிறுவனங்கள், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு விசா ஸ்பான்சர் செய்வதற்கு தடை விதிக்கப்படும்!

ஆக, புலம்பெயர்ந்தோரை தடுப்பதற்கு பதிலாக, உள்நாட்டுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அந்த பணிகள் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்காமல் தடுக்க லேபர் கட்சி திட்டம் வைத்துள்ளது.

போட்டியிலிருக்கும் மற்றொரு கட்சியான Reform UK கட்சியும், வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க திட்டம் வைத்துள்ளது. ஆக மொத்தத்தில், பிரித்தானியாவில் ஆட்சி மாறினாலும் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்போர் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருப்பார்களா என்றால், அது சந்தேகமே!

Share
தொடர்புடையது
image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...

image 1200x800 20
செய்திகள்உலகம்

நாவல்னி மரணத்தில் புதிய திருப்பம்: தவளை விடம் பயன்படுத்தப்பட்டதாக ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சித் தகவல்!

ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நாவல்னியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை...

image 1200x800 29
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கனடா உறவில் புதிய மைல்கல்: மாகாண சபைத் தேர்தல் மற்றும் இந்து-பசிபிக் மூலோபாயம் குறித்து விசேட சந்திப்பு!

இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய இசபெல் மார்ட்டின் (H.E. Isabelle Martin) மற்றும் பொதுநிர்வாக, மாகாண...