24 6665295f422db
இலங்கைசெய்திகள்

பசிலுடன் இணையும் முயற்சியில் பிரபல அரசியல்வாதி

Share

பசிலுடன் இணையும் முயற்சியில் பிரபல அரசியல்வாதி

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ராஜபக்சவை அரசியலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என கூறி வந்தாலும், அடுத்த பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு கூட்டணி இல்லாத காரணத்தினால் சம்பிக்க ரணவக்க இவ்வாறு செய்துள்ளதாக இணைந்துள்ளதாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து வெளியேறினார், ஆனால் சமீபத்தில் அவர் மீண்டும் அந்த கட்சியில் அவர் சேர முயற்சித்துள்ளார். ஆனால் பதில் வராததால் இப்போது பொது ஜன பெரமுன கட்சி பக்கம் அவரது அவதானம் திரும்பியுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சிக்கு நேரடியாக செல்ல முடியாது என்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாற்றுப்பாதையில் செல்வதே அவரது திட்டமாகும்.

எதிர்க்கட்சியின் சுயேச்சை உறுப்பினர் என்று கூறிக்கொண்டாலும், சம்பிக்க நீண்டகாலமாக ரணில் விக்ரமசிங்கவுடன் செயற்பட்டு வருகிறார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...