24 666447578cbed
இலங்கைசெய்திகள்

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

Share

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர்

டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ( Mette Frederiksen) தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஃபிரடெரிக்சன், தலைநகர் கோபன்ஹேகன் சதுக்கத்தில் இருந்தபோது நேற்று (07) மாலை 6 மணியளவில் ஒருவரால் பிரதமர் தள்ளப்பட்டதாகவும், இது அவரை தடுமாறச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவரை தள்ளிச் சென்றவர் தப்பி ஓட முயன்றபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்ற தாக்குதல் அண்டை நாடான ஸ்லோவேக் பிரதம மந்திரி ரொபர்ட் ஃபிகோ மீதும் அண்மையில நடத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த மே 15ஆம் திகதி ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார்.

ஹன்ட்லோவா நகரில் அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு ஆதரவாளர்களை வாழ்த்திக் கொண்டிருந்த ஃபிகோ அருகில் இருந்து நான்கு முறை சுடப்பட்டார்.

இந்நிலையில், அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...