24 66626bec64928
இலங்கைசெய்திகள்

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்

Share

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக

ரணில்

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அதிபரின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.

ரணிலின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில் (colombo) இன்று (06) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.

கொழும்பு (Colombo) – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று (06) காலை திறந்து வைத்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிபர் தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....