24 665f85d7033c3
இலங்கைசெய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்: மகிந்தானந்தவிற்கு எதிராக முறைப்பாடு

Share

தீவிர சிகிச்சை பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்: மகிந்தானந்தவிற்கு எதிராக முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தனது தந்தையை தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் (Gunathilaka Rajapaksha ) மகன் கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் எழுத்துப் பூர்வ முறைப்பாடும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது தந்தையை தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்துள்ளதாகவும் அதற்கு அறுவை சிகிச்சையில் இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது தந்தை தற்போது கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தநிஹால் தள்துவ குறிப்பிடுகின்றார்.

மேலும், முறைப்பாட்டாளரான குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் சென்ற போதிலும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் வாக்குமூலம் பெற முடியாமல் போனதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...