24 665d5135e0486
இலங்கைசெய்திகள்

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

Share

வாகன விபத்துக்களில் நால்வர் பலி

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கம்பகா (Gampaha) மாவட்டம் மஹபாகே நேற்று (02) 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ராகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று (02) கொழும்பு (Colombo) கொட்டாவை அத்துருகிரி வீதியில் மெண்டிஸ் வளைவுக்கு அருகில் அத்துருகிரியவிலிருந்து கொட்டாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த மூவர் மற்றும் காரின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த 42 மற்றும் 54 வயதுடைய ஹிக்கடுவை மற்றும் ஹப்புத்தளை பிரதேசங்களை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நேற்று இரவு நிட்டம்புவ, கொழும்பு – கண்டி (Kandy) வீதியில் முருதாவல சந்திக்கு அருகில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நடந்து சென்ற நபர் மீது மோதியுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...