24 665d49abaf997
இலங்கைசெய்திகள்

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..!

Share

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..!

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பத்தொன்பது வயது இளைஞன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அதிவேகமாக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி துரத்திச்சென்று காவல்துறையினரால் மோட்டார் சைக்கிளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றதாகக் கூறப்படும் இளைஞன், மோட்டார் சைக்கிளை தன்னுடன் எடுத்துச் சென்று பின்னர் சூரியவெவ காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிகிச்சைக்காக காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...