24 665d3768c1528
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினால் மாணவன் விபரீத முடிவு

Share

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினால் மாணவன் விபரீத முடிவு

குருநாகலில் (Kurunegala) உயர்தரப் பரீட்சையில் (G.C.E A/L Exam) பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் வெளியான பெறுபேறுகளைப் பெற்ற மாணவனே தவறான முடிவை எடுத்துள்ளார்.

குறித்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவனுக்கு ஒரு திறமைச் சித்தி (C) மற்றும் இரண்டு சாதாரண சித்திகள் (S) கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பரீட்சைப் பெறுபேற்றினை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...