24 665bc87fb84b0
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பணம்

Share

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பணம்

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்கான நிதியை வழங்க சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கே இந்த நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளர் நிஹால் பிரசன்ன (Nihal Prasanna) தெரிவித்துள்ளார்.

இதன்படி, தொழில்சார் கற்கைநெறியை கற்க ஒரு மாணவருக்கு ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படும் என உதவிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சமூகம் ஏற்றுக்கொள்ளாத வேலைகளில் அந்த மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தான் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களை மாத்திரம் தெரிவு செய்வதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த படிப்புகள் மூன்றாம் நிலை மற்றும் தொழில்முறை கல்வி ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...