24 665a7db1111bc
இலங்கைசெய்திகள்

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

Share

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென அறிவித்தல் வெளியாக உள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாக உள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து அறிந்துகொள்ள முடியும்.

2023 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 64.33 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது (Jaffna Hindu College) 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது.

மேலும், வேம்படி மகளிர் கல்லூரி 30 3ஏ, 29 2ஏ பி, 8 2ஏ சி, ஒரு 2ஏ எஸ், 12 ஏ 2பி, 16 ஏபிசி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...