24 6650d708d89d8
இலங்கைசெய்திகள்

டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைப்பின் தொற்று நோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையில் 24000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் திகதி வரையில் நாட்டில் 24277 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் இதில் 5183 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 8711 எனப் பதிவாகியுள்ளது.

அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....