24 66514f1a9edae
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் பாதிப்பு – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Share

சீரற்ற காலநிலையால் பாதிப்பு – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரத் தடையை சீர்செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகளின் கீழ், சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விநியோக மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் மீது மரங்கள் விழுந்துள்ளன.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடையை சீரமைக்க தங்களால் முடிந்தவற்றை செய்வோம் எனவும் அதற்கான ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, அறுந்து விழுந்த மின்கம்பிகளை எந்த வகையிலும் தொடவேண்டாம் எனவும் ஊழியர்களின் பணிகளில் தடை ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நெரிசல் காரணமாக அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியாது எனவும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் விரும்பிய விரைவான சேவையை வழங்க முயற்சித் வருகிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...