24 665105f4bb1d4
இலங்கைசெய்திகள்

ஜப்பானில் இலங்கை மாணவர்கள் கைது

Share

ஜப்பானில் இலங்கை மாணவர்கள் கைது

சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக இரண்டு இலங்கை(Sri lanka) மாணவர்கள் ஜப்பானில்(Japan) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த போது தனது குழந்தையை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் இபராக்கி மாகாணத்தின் டொரைட்டின் ருபாசிங் லியனகே உதேசிகா அயோமி ஜெயலத்தும், அதற்கு உதவியதாக அவரது ஆண் நண்பரான முனசிங்க சுதேஸ் டில்சான் டி சொய்சாவும் கடந்த 23ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி டி சொய்சாவின் வீட்டில் வைத்து ஜயலத் தனது குழந்தையை கருக்கலைப்பதற்காக போதைப்பொருளை பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஜப்பானிய பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸாரிடம் இருவரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கர்ப்பமாகி குழந்தைகளை பிரவசித்த சில மாணவிகள் வீடு திரும்பியதாகவும் சிலர், தங்கள் குழந்தைகளை சொந்த நாடுகளில் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுவிட்டு படிப்பை தொடர்ந்ததாகவும் கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மாணவர்களின் பிரச்சினையில், சர்வதேச மாணவர்களின் நிலையற்ற குடியுரிமை என்ற விடயமும் ஒரு காரணியாக இருக்கலாம் என நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 43aa3a17db
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்: 43% வாகன ஓட்டுநர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு அடிமை!

கொழும்பு மாநகரப் பகுதியில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் ‘ஐஸ்’ (Crystal...

image 7582b14241 696x391 1
செய்திகள்இலங்கை

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு அராஜக நிலையை நோக்கிச் செல்கிறது – தயாசிறி ஜயசேகர கடும் எச்சரிக்கை!

  நாட்டில் ஒரு மாத காலமாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமிக்கப்படாததால், நிதி ஒழுக்கம்...

Dailynews650 19
செய்திகள்இலங்கை

EPF நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை – தவறான செய்திகளுக்குத் தொழில் அமைச்சு உத்தியோகபூர்வ விளக்கம்!

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) தொடர்பாகத் தொழில் பிரதி...

chamara3
இலங்கைசெய்திகள்

மதுபான போத்தல் ஒன்றின் விலையை 2,000 ரூபாயாகக் குறைக்கவும் – நாடாளுமன்றில் சாமர சம்பத் கோரிக்கை!

நாட்டில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் நோக்கில், மதுபான போத்தல் ஒன்றின் விலையை 2,000 ரூபாயாகக்...