24 664f89c36f4b2
உலகம்செய்திகள்

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று நாடுகள் : இஸ்ரேல் நடவடிக்கை

Share

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று நாடுகள் : இஸ்ரேல் நடவடிக்கை

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே ஒரே தீர்வாக அமையும் என பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூறி வரும் நிலையில் அந்த 3 நாடுகள் இம்முடிவை அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பையடுத்து, நோர்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது இஸ்ரேலுக்கு எதிரானதோ அல்லது ஹமாஸுக்கு ஆதரவளிப்பதோ அல்ல என்றும், காசா பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக என்றும் ஸ்பெயின் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தவிர, 140 உறுப்பு நாடுகள் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக இதுவரை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...