24 664e6448754a3
உலகம்செய்திகள்

கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான மகிழ்ச்சி தகவல்

Share

கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான மகிழ்ச்சி தகவல்

புலம்பெயர்தல் தொடர்பில் கனடாவின்(Canada) அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதன்முறையாக தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்காக கனடா அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க இருப்பதாக கனடா புலம்பெயர்தல் அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா என்ன செய்துவருகிறது என சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார்.

கனடாவுக்கு தேவைப்படும் திறன்மிகுப் பணியாளர்களை தக்கவைப்பது தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே நேரத்தில், கனேடியர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான வேலைவாய்ப்புகளையும் பாதுகாப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அடுத்த கட்ட நடவடிக்கையாக, முதன்முறையாக, கனடாவின் வருடாந்திர புலம்பெயர்தல் திட்டத்தில், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோரையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, திறன்மிகுப் பணியாளர்களான தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோரை, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ள விடயம், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...