24 664c8338269c2
உலகம்செய்திகள்

கனடாவில் தற்காலிக விசாவிலுள்ள தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஆபத்து

Share

கனடாவில் தற்காலிக விசாவிலுள்ள தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஆபத்து

கனடா அரசாங்கத்தின் நடைமுறை காரணமாக, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடவடிக்கை CRS நடைமுறையின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கொருமுறை, CRS தரவரிசையை கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு வெளியிடுகிறது.

அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் நிரந்தர குடியிருப்பு அனுமதி அட்டையைப் பெறுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு நிர்ணயித்த CRS புள்ளிகள் 540 மற்றும் அதற்கும் அதிகம்.

மூன்று ஆண்டுகள் நீடிக்கும் post-graduate work permit வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் இந்த புள்ளியை எட்ட தகுதிபெறவில்லை என புலம்பெயர்தல் ஆலோசகரான Manan Gupta தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொடர்பான அமைச்சராக மார்க் மில்லர் நியமிக்கப்பட்ட போது, 2023இல் காலாவதியாகும் அனுமதிகள் நீட்டிக்கப்படாது என்று தெரிவித்தார்.

இதன்போது CRS புள்ளி வரம்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Manan Gupta தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...