24 664d41f66be27
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசு தரப்பில் தகவல்

Share

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசு தரப்பில் தகவல்

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவை என்றால் நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் உண்டு.

எனினும், ஒன்றிரண்டு வாரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த உரிய கால நிர்ணயங்கள் இல்லை என்ற போதிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த கால வரையறை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றின் முன்னிலையில் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...

19 7
உலகம்செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா: பென்டகன் முக்கிய அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 10) முன்னெப்போதும் இல்லாத வகையில்...

18 9
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மார்ச் 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப்...