24 664a9931ccb33
உலகம்செய்திகள்

துருக்கியை அடுத்து ரஷ்யாவும் ஈரான் ஜனாதிபதி தொடர்பில் தீவிரம்

Share

துருக்கியை அடுத்து ரஷ்யாவும் ஈரான் ஜனாதிபதி தொடர்பில் தீவிரம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து தேவையான அனைத்து உதவிகளும் முன்னெடுக்க தயாராக இருப்பதாக துருக்கி அறிவித்திருந்தது.

தற்போது ரஷ்யாவும் உதவ முன்வந்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி தொடர்பில் தகவல் வெளியானதும், தமக்கு துக்கத்தை ஏற்படுத்தியதாக துருக்கியின் எர்டோகன் தெரிவித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான உதவிகள் அனைத்தையும் முன்னெடுக்க துருக்கி தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடும் மூடுபனியால் சூழப்பட்ட மலைப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையை ஈரானிய மீட்பு குழுக்கள் முன்னெடுத்துள்ளனர். 63 வயதான ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டரே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில் தங்களின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை துருக்கியிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி அரசாங்கம் இரவு நேரத்தில் பணியாற்றக்கூடிய நிபுணர்கள் குழு ஒன்றை உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.

மட்டுமின்றி 32 பேர்கள் கொண்ட சிறப்பு நிபுணர்கள் குழு ஒன்றையும் துருக்கி களமிறக்கியுள்ளது. ஏற்கனவே அஜர்பைஜான், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் ஈரானுக்கு தங்கள் உதவியை வழங்க முன்வந்துள்ளன.

தற்போது ரஷ்யாவும் தேடுதல் நடவடிக்கையில் களமிறங்க ஆயத்தமாக உள்ளதாகவும், ஈரானின் பதிலுக்கு காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஈரான் முழுவதும் மக்கள் ஜனாதிபதி ரைசி தொடர்பில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...