24 6646dc80bdf00
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெறுவதில் சிக்கல்

Share

பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெறுவதில் சிக்கல்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக மாணவர்கள் பட்டம் பெறுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிள ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்து பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் சுமார் ஒன்றரை இலட்சம் மாணவர்களின் பட்டப் படிப்பினை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்த பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி குறித்த வழிகாட்டல் கையேடு வெளியிடுவதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும் என கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...