24 66457e022c030
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட ஆராய்ச்சி நிறுவனம்

Share

இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட ஆராய்ச்சி நிறுவனம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரூபா310 தொடக்கம் 320 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக முதல் மூலதன ஆராய்ச்சி நிறுவனம் (First Capital Research) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முடிந்தவுடன், இறக்குமதிகளுக்கான தேவை அதிகரித்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆரம்பிக்கப்படும் நிலையில் இந்த சரிவு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை 2029ஆம் ஆண்டு வரை 06 முதல் 07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடாந்த வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.

இது கடன் மறுசீரமைப்புக்கு பின் 03 தொடக்கம் 04 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறையலாம்.

இந்தநிலையில் குறிப்பிட்ட இறக்குமதிகள் மீதான பண வரம்பு வைப்புத் தேவைகளை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தளர்த்தியுள்ளது.

அத்துடன் அரசாங்கம், வாகன இறக்குமதி உட்பட தற்போதுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இது ரூபாய் மாற்று விகிதத்தில் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மூலதன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சுற்றுலா வருவாயில் முன்னேற்றம் மற்றும் அதிக பணம் அனுப்புதல் ஆகியவற்றின் மத்தியில் ரூபாயின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதோடு சுற்றுலா வருவாய் 46.3 சதவீதம் அதிகரித்து இந்த ஆண்டு 03 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும்.

இதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் கடந்த ஆண்டு பதிவான 06 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து இந்த ஆண்டு 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...