24 6641ece65e92d
இலங்கைசெய்திகள்

பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை எதிர்க்கும் அண்டை நாடு

Share

பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை எதிர்க்கும் அண்டை நாடு

பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் பலம் பொருந்திய அண்டை நாடு ஒன்று ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் (Ministry of Foreign Affairs) தரப்பு இந்த விடயம் தொடர்பில் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.

குறித்த செய்தியில் மேலும்,

“பிரிக்ஸ் அமைப்பின் (BRICS) ஸ்தாபக உறுப்பினராகக் கூறப்படும் பலம் வாய்ந்த அண்டை நாடே செல்வாக்குமிக்க இந்த பொருளாதாரக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரிக்ஸ் அமைப்புடன் இணைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த அண்டை நாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.

மேலும், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையின் நுழைவை முறியடிக்க தீவிரமாக பரப்புரை செய்து வருவதுடன், முன்னதாக ஆசியான் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் முயற்சிக்கும் இந்த நாடு எதிர்ப்பை காட்டியது.

அதேவேளை, இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைவதைத் தடுப்பதற்கு பல்வேறு நியாயங்களைப் பயன்படுத்தி குறித்த நாட்டினால் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேசில் (Brazil), ரஸ்யா (Russia), இந்தியா (India), சீனா (China) மற்றும் தென்னாப்பிரிக்காவை (South Africa) உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் எத்தியோப்பியா, ஈரான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகியவற்றையும் உள்ளீர்த்து, கூட்டமைப்பின் உறுப்பினர்களை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
875262697 1
இலங்கை

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் பணம் பறித்த கும்பல் கைது!

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை...

image 1000x630 13
இலங்கை

குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் உதவி: குற்றவாளிகளை நாடு கடத்த நடவடிக்கை

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகளை இன்டர்போல்  பாராட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,...

image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...