24 6642ba24ed97c
இலங்கைசெய்திகள்

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு சிக்கல்

Share

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு சிக்கல்

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 178,613 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பதை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் வாடகை வீடுகளிலும், வாடகை அறைகளிலும் தங்கி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 02 நாட்களில் ஒவ்வொரு கிராம அதிகாரியின் பிரிவுகளிலும் தற்காலிகமாக வசிப்பவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.

வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட வீடுகளில் 37,183 குடும்பங்களில் 112,963 பேரும், வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட அறைகளில் 34,133 பேரும், காவலர்கள், வீட்டுப் பணியாளர்கள், தாதியர் என 31517 பேரும் தற்காலிகமாக வசிக்கின்றனர் என்றும் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒழுங்குமுறை தரவு அமைப்பு, தானியங்கி கைரேகை அடையாள அமைப்புக்கு அனுப்பி அறிக்கைகளைப் பெற்று, போதைப்பொருள் பணியகத்தின் தரவு அமைப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன்படி மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...