24 663de779e0b15
உலகம்செய்திகள்

கனடா பெண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

Share

கனடா பெண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

கனடாவில் (Canada) மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பெண்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கனடாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகளை 40 வயதிலிருந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை கனேடிய புற்றுநோய் அமைப்பு வழங்கியுள்ளது.

கனடாவின் சில மாகாணங்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து மமாகிராம்ஸ் பரிசோதனை நடத்தப்படுகின்றன.

அத்துடன், கனடாவின் பல பகுதிகளில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தற்போது மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கனடா முழுவதிலும் உள்ள பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள சமசந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அடையாளம் காணுவதன் மூலம் எளிமையான வழிகளில் சிகிச்சை அளிக்கப்பட முடியும் என புற்றுநோய் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...