24 6640422546132
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை முதல் பயனாளி மரணம்

Share

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை முதல் பயனாளி மரணம்

அமெரிக்காவில் (America) மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை வைத்தியர்களும் நேற்று (11) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேன் (Richard Rick Slayman) என்பவருக்கே கடந்த மார்ச் மாதம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பன்றி சிறுநீரகம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயற்படும் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக அவர் இறந்ததற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என்று நிபுணர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் 100,000இற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தேசிய காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் தவணை வருவதற்கு முன்பே இறந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

Share
தொடர்புடையது
07 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு நாளை கடும் வெப்ப எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (மார்ச் 22, 2026) வெப்பமான வானிலை நிலவக்கூடும்...

06 17
செய்திகள்இந்தியா

வீட்டு வேலைகளைக் கணவனும் பகிர வேண்டும்: விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுரை!

வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மாறிவரும் காலத்திற்கு ஏற்பக்...

05 19
செய்திகள்உலகம்

டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவின் போர் வியூகத்தை மாற்றும் புதிய திருப்பம்!

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு...

04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...