24 663dbd1239022
உலகம்செய்திகள்

தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு.., தமிழகத்தில் சோகம்

Share

தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு.., தமிழகத்தில் சோகம்

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் 500 க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

தமிழக மாவட்டமான தேனி, கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் 600 மதிப்பெண்களுக்கு 494 மதிப்பெண்கள்எடுத்துள்ளார்.

இவர், தான் 500 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என நினைத்திருந்ததால், அதற்கு மேல் வாங்க முடியவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வருத்தத்தில் இருந்துள்ளார்.

அப்போது மாணவரின் பெற்றோர் அவரை சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாணவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவரை காணவில்லை. அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது தூக்கிட்டு விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்த கம்பம் காவல் நிலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்று மாணவர் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்று பெற்றோர்கள் சந்தேகித்துள்ளனர்

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...