download 1
உலகம்செய்திகள்

9 மில்லியன் காலி வீடுகளால் திணறும் ஜப்பான்! நம்ப முடியாத காரணம் என்ன?

Share

9 மில்லியன் காலி வீடுகளால் திணறும் ஜப்பான்! நம்ப முடியாத காரணம் என்ன?

ஜப்பான் 9 மில்லியன் காலி வீடுகளுடன் வளரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.

காலி வீடுகளின் அதிகரிப்பால் ஜப்பான் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதாவது ஜப்பானில் காலி வீடுகளின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவுக்கு 9 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இது நியூயார்க் நகரின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும். இது 14% காலி வீட்டு விகிதமாகும், இந்த புதிய பிரச்சனை ஜப்பானின் மக்களின் வகை சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு கடுமையான அறிகுறியாகும்.

ஜப்பானில் பாரம்பரியமாக, கைவிடப்பட்ட வீடுகள், “அகியா”(akiya) என்று அழைக்கப்படுகின்றன, இது கிராமப்புறங்களில் காணப்படும் ஒரு நிகழ்வாக இருந்தது.

தற்போது, டோக்கியோ மற்றும் கியோட்டோ போன்ற பெருநகரங்களும் கூட இந்த போக்குடன் போராடிக் கொண்டிருக்கின்றன.

இதன் அடிப்படைக் காரணத்தை சுட்டிக்காட்டும் நிபுணர்கள், சுருங்கும் மக்கள் தொகை. அதாவது ஜப்பானின் பிறப்பு விகிதம் பல தசாப்தங்களாக கவலைப்படக் கூடிய அளவில் குறைவாக உள்ளது, அதே நேரத்தில் அதன் மக்கள் தொகை வேகமாக வயதாகி வருகிறது.

குறைவான மக்கள் இருப்பதால், இருக்கும் வீடுகள் நிரப்பப்படுவதில்லை. மேலும் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் இயற்கை பாதிப்புகள் மக்களை இடம்பெயர்ந்து செல்ல தூண்டுகின்றன என தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் தீர்வுகளை கண்டறிய முயற்சித்து வருகிறது. இடிப்பு மற்றும் சொத்துக்களை ஒன்றிணைப்பதற்கான ஊக்கத் தொகைகள் ஆராயப்பட்டு வருகின்றன.

இருப்பினும், கலாச்சார காரணிகள் சிக்கலை அதிகரிக்கின்றன. முன்னோர்களை மதிக்கும் உணர்வு மற்றும் பாரம்பரியமாக வீடுடைமை வைத்திருப்பதில் உள்ள வலுசை ஆகியவை, குடும்ப சொத்தை விட்டுக்கொடுப்பதை கடினமாக்குகிறது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...