24 663450d115a97 1
இலங்கைசினிமா

பிரபல நடிகையால் சுந்தர் சி-க்கும் குஷ்பூவிற்கும் சண்டை.. உண்மையை உடைத்த இயக்குனர்

Share

பிரபல நடிகையால் சுந்தர் சி-க்கும் குஷ்பூவிற்கும் சண்டை.. உண்மையை உடைத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. அரண்மனை, அன்பே சிவம், கலகலப்பு, அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா என நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கும் படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் இன்று அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் கலந்துகொண்ட சுந்தர் சி பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்றாக பிரபல நடிகையால் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே சண்டை வந்தது என கூறியுள்ளார்.

இதில் சுந்தர் சி-யின் மனைவி நடிகை குஷ்பூ தனது பிறக்கப்போகும் மகளுக்காக ‘மாளவிகா’ எனும் பெயர் சூட்ட வேண்டும் என ஆசையோடு இருந்துள்ளார். இதை தனது கணவரிடமும் கூறியுள்ளார். இந்த சமயத்தில் படத்தின் பாடல் அமைக்க இசையமைப்பாளர் தேவாவின் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார் சுந்தர் சி.

கதாநாயகியின் பெயரில் இந்த பாடலை அமைத்துள்ளார் தேவா. ஆனால், சரியான பெயர் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மாளவிகா என்ற பெயரை இசையமைப்பாளர் தேவாவிடம் கூறியுள்ளார். அவரும் அட இது நல்லா இருக்கே என கூறி, மாளவிகா பெயரிலேயே பாடலை அமைத்துள்ளார்.

அதன்பின், அப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான, நடிகையின் பெயரும் மாளவிகாவாக மாறிவிட்டது. இப்படத்திற்கு பின் மளவிகாவும் தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.

தனது மகளுக்கு வைக்க வேண்டும் என குஷ்பூ தேர்ந்தெடுத்து வைத்திருந்த பெயரை, கதாநாயகிக்கு வைத்ததால் நடிகை குஷ்பூவிற்கும் சுந்தர் சி-க்கும் சண்டை வந்ததாம். இதை நகைச்சுவையாக அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி.

Share
தொடர்புடையது
25 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முரண்பாடான செயல்: நாமல் ராஜபக்ச விமர்சனம்!

நாட்டில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் உறுதியளித்திருந்த நிலையில், திடீரென...

24 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலா மேம்பாடு: 2026-2028 வரை ரூ. 2,667 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கையின் சுற்றுலாத் துறையை நீண்டகால மற்றும் நிலைபேறான முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2026 முதல்...

23 5
செய்திகள்இலங்கை

இலங்கை – நேபாளம் இடையே புதிய விசா விலக்கு ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி!

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,...

22 8
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...