24 6632fadf9d88f
இலங்கைசெய்திகள்

நாட்டில் பல்வேறு தொழிற்சங்க போராட்டங்கள்

Share

நாட்டில் பல்வேறு தொழிற்சங்க போராட்டங்கள்

நாட்டில் பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.

இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் இந்த இரண்டு நாள் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதேவேளை கொழும்பில் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டமொன்றும் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கே.எல்.உதயசிறி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றைய தினம் நண்பகல் முதல் தொடர் வேலை நிறுத்தப் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.

கோரிக்கைகள் குறித்து பல்வேறு தடவைகள் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என கல்விசாரா ஊழியர் சங்கத்தின் ஊடகச் செயலாளர் சமன் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...