24 65fbde4155b40
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு பல்வேறு விசாவில் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

Share

அவுஸ்திரேலியாவுக்கு பல்வேறு விசாவில் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

அவுஸ்திரேலியாவில் தொழில் அல்லது கற்கை நடவடிக்கைக்காக செல்வதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் கொழும்பு5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வேலைத்திட்டம் இலவசமாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சரியான முறையில் செல்வதற்கு வழிக்காட்டுவதே இதன் நோக்கமாகும்.

அவுஸ்திரேலியாவின் பிரதான குடியேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சட்டதரணிகள் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

மாணவர் விசா, ஸ்பொன்ஸர் விசா உட்பட அனைத்து விசாக்களும் பெற்றுக் கொள்ளும் முறை தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்படும்.

சரியான பல்கலைக்கழம் ஒன்றை தெரிவு செய்தல், குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கான பாடநெறியை தெரிவு செய்தல், புலமைப்பரிசிலுக்கு அவசியமான தகுதி பெறுதல் ஆகியவை தெளிவுப்படுத்தப்படவுள்ளது.

புலமைப்பரிசிலுக்கு ஈடுபடுத்தல், நிதி தேவைக்காக சரியான ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழில் விசாவுக்கு அவசியமான அனுசரனைக்கு தொடர்புக் கொள்ள வேண்டிய சரியான வழிமுறை தொடர்பில் இதன் போது தெளிவுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...