24 66304a61af010
இலங்கைசெய்திகள்

பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா

Share

பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டியை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரிப்பது நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 115 பில்லியன் ரூபா பயனாளிகளின் கணக்குகளில் சேர்க்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலம் பயனாளிகளுக்கு நீதி கிடைத்துள்ளதில் தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக சுமார் 27 இலட்சத்திற்கும் அதிக ஊழியர்களின் சேமலாப நிதியம் இந்த வட்டி வீத அதிகரிப்பின் மூலம் பல நன்மைகளை பெற்றுத்தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் குழு 31.12.2023 அன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் மீதிக்கு 13 சதவீத வட்டி விகிதத்தை செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது” என மத்தியவங்கி அறிவித்துள்ளது.

இதற்கிடையில், 31 டிசம்பர் 2023 இன் படி EPF உறுப்பினர் நிலுவைகளுக்கான வட்டி விகிதமாக 13% விண்ணப்பிப்பதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...