24 662b0eaf0fc98
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல்

Share

இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல்

எல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாக கூறப்படும் பெரிய இரத்தினக்கல் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு பலங்கொட ரஜவக பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த நீலம் மற்றும் வெள்ளை கொரண்டம் இரத்தினக்கல் 802 கிலோ எடை கொண்டதாகும்.

மேலும் அது பல கோடி ரூபா பெறுமதியானது என இரத்தினக்கல்லுக்கு பொறுப்பான குஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வாங்குபவர்கள் இந்த கல்லை பரிசோதித்து விலைகளை வழங்கியுள்ளனர். மேலும் பலர் அதனை கொள்வனவு செய்வதற்கான விலையை வழங்க முடியும்.

சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் பெறப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளுடன், இலங்கையின் கொருண்டம் வகையின் மிகப் பெரிய கல் என குறிப்பிடப்படுகிறது.

இந்த இரத்தினக்கல் கல், எல்ல மவுண்ட் ஹெவன் ஹோட்டலில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த அபூர்வமிக்க இரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்ட போதும், அது தொடர்பான பரிசோதனைகள் கடந்த வருடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...