24 662b0eaf0fc98
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல்

Share

இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல்

எல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாக கூறப்படும் பெரிய இரத்தினக்கல் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு பலங்கொட ரஜவக பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த நீலம் மற்றும் வெள்ளை கொரண்டம் இரத்தினக்கல் 802 கிலோ எடை கொண்டதாகும்.

மேலும் அது பல கோடி ரூபா பெறுமதியானது என இரத்தினக்கல்லுக்கு பொறுப்பான குஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வாங்குபவர்கள் இந்த கல்லை பரிசோதித்து விலைகளை வழங்கியுள்ளனர். மேலும் பலர் அதனை கொள்வனவு செய்வதற்கான விலையை வழங்க முடியும்.

சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் பெறப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளுடன், இலங்கையின் கொருண்டம் வகையின் மிகப் பெரிய கல் என குறிப்பிடப்படுகிறது.

இந்த இரத்தினக்கல் கல், எல்ல மவுண்ட் ஹெவன் ஹோட்டலில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த அபூர்வமிக்க இரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்ட போதும், அது தொடர்பான பரிசோதனைகள் கடந்த வருடங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...