24 66264dea61717
இலங்கைசெய்திகள்

வரி ஏய்ப்புச் செய்த வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

Share

வரி ஏய்ப்புச் செய்த வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

வரி ஏய்ப்புச் செய்து மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ, கைமாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று(22.04.2024) குறித்த தடையை விதித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையொன்றின் பிரகாரம் இலங்கையில் 112 வாகனங்கள் வரி ஏய்ப்புச் செய்து மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த வாகனங்கள் உரிய முறையில் சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் போலியான ஆவணங்கள் மூலம் விடுவிக்கப்பட்டு, பெறுமதி குறைந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை முடிவில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

அதன் பிரகாரம் குறித்த வாகனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை அவற்றை வேறு நபர்களுக்குக் கைமாற்றவோ, விற்பனை செய்யவோ தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...