பிரித்தானிய வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியா வர வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பொன்றில், இலங்கை மக்கள் பலரும் பிரித்தானியாவிற்கு வர வீசா விண்ணப்பம் செய்கிறார்கள். இந்த நிலையில் தெரியாமல் மக்கள் நிறைய பேர் போலி ILTS சான்றிதழை பெறுகிறார்கள். சிலர் தெரிந்தும் வாங்குகிறார்கள்.
இந்த சான்றிதழ் தொடர்பில் பலரும் தவறாக வழிநடத்துகிறார்கள். முதலில் இதனை அதிமுக்கிய எச்சரிக்கையாக கொண்டு எந்த ILTS குறிப்பாக இலங்கையிலிருந்து ILTS சமர்ப்பிப்பதாக இருந்தால் அதனை உள்ளக ரீதியாக அவதானிக்கிறார்கள்.
எனவே நீங்கள் பரீட்சை நிலையத்தில் அமர்ந்து பரீட்சை எழுதி அதற்கான புள்ளிகளை எடுக்கவில்லை என்றால், யாராவது உங்களுக்கு ILTS சென்டரில் தானே முகாமையாளர், தான் அங்கு பெரிய பதவியில் இருக்கிறேன் என கூறினால் தயவு செய்து நம்ப வேண்டாம்.
ஏனெனில் அதனை சரிபார்க்கும் போது அது போலியென உறுதியாகினால் 10 வருடங்கள் தடை விதிக்கப்படும். அதன் பிறகு பிரித்தானியா வர முயற்சித்தால் அது மிகவும் கடினமானதாக இருக்கும். தயவு செய்து இது தொடர்பில் இலங்கை மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.