24 6620fa286247a
சினிமாசெய்திகள்

முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்- இப்படியொரு அதிர்ச்சியான கிளைமேக்ஸா?

Share

முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்- இப்படியொரு அதிர்ச்சியான கிளைமேக்ஸா?

விஜய் தொலைக்காட்சியில் தீபக் மற்றும் நக்ஷத்ரா முதன்முறையாக ஜோடி சேர கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் தமிழும் சரஸ்வதியும்.

எஸ்.குமரன் அவர்களின் இயக்கத்தில் தயாராகி வந்த இந்த தொடர் ஆரம்பத்தில் விறுவிறுப்பின் உச்சமாக இருந்தது.

கோதை-சந்திரகலா என இருவரை வைத்து கதை நகர்ந்து வர பாதியில் அர்ஜுனா தமிழா என்று மாறியது. அப்படியே இவர்களை வைத்தே கதை நகர்ந்துகொண்டு வர தற்போது சீரியல் முடிவுக்கும் வந்துள்ளது.

தற்போது கதையில் ஈவு இரக்கம் இல்லாத ஒரு மோசமான கதாபாத்திரமாக காட்டப்பட்டு வருகிறது.

வில்லத்தனத்தை ஊட்டி ஊட்டி வளர்த்த அவரது தாயே தற்போது தனது மகனை கொலை செய்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டு அவரது கதாபாத்திரம் முடிவுக்கு வருகிறது.

இதுவரை அம்மா சொன்னதை கேட்டு பல தவறுகள் செய்துவந்த அர்ஜுன், தற்போது அம்மாவின் வார்த்தை மீறி குழந்தையை வைத்து தவறுகள் செய்ய துணிந்ததால், அவரை கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளார் அர்ஜுனின் அம்மா.

பொதுவாக ஒரு தொடரை முடிக்கிறார்கள் என்றால் இறுதியில் வில்லனை நல்லவராக காட்டுவார்கள், ஆனால் இதில் வில்லனை முடித்துள்ளார்கள், இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...